Wednesday, January 1, 2014

Sunday, June 16, 2013


ஒவ்வொரு பெண்ணும்  
உள்ளுக்குள் ஊமையாய் மருகுகிறாள் 
நவீன யுகத்து கண்ணனின் வரவிற்காக - ஆம்  
ஒவ்வொரு முறையும் பார்வையால் - அவள் 
துகிலுரியப்படும் போது ...

தேடல்

தொலைந்து போன உறவுகளையா
அல்லது நபர்களையா - முதலில்
எதை தேடுவது  என்ற
குழப்பத்தினுள் நின்று கொண்டு
தொலைத்து விட்ட எனது - புன்னகையை
தேடத் துவங்கி இருக்கின்றன் .....

Sunday, June 9, 2013

நினைவு வடுக்கள் 

நினைவடுக்குகளில் உந்தன் 

நினைவுகளை நிதமும் 
தேடித்தேடி தோற்கிறேன்  - ஆம் 
நினைவு வடுக்களின்  - ரணம் 
தாங்காமல்....

Tuesday, November 15, 2011

தவிர்க்கிறேன் தவிக்கிறேன்..!

யாருமற்ற மௌனத்தில்
இரவில் கரைந்தொழுகும்
உன் நினைவின் பிம்பங்கள்
வென்றேடுக்கிறது என்னை...

களைந்தெடுக்க இயலா
கனவென
பித்தெறிய முடியா
பச்சை குத்திய ரணமென
உன்னால் கிளர்ந்தெழும்
ஏன் மன உணர்வின் தழும்புகளை
பிறர் காணக் கூடுமோ
எனும் அச்சத்தின் விளிம்பில்
தத்தளிக்கிறேன்!

உன்னை தவிர்க்க
உள்ளுக்குள் மட்டுமே
உணர்வுகளை ஒளித்து வைத்து
ஏளனப் பார்வை ஒன்றை
உன்மேல் வீசி கடக்கிறேன்!

ஆயினும், உறைய வைக்கவே
இயலவில்லை ...
இமை மூடிய கண்ணுக்குள்ளும்
இதழ் மூடிய இதயத்துள்ளும்
நீ எழுப்பும் மெல்லிய
சலன அதிர்வுகளை...!




படித்ததில் பிடித்தது

Monday, March 15, 2010

காதல் சுவடு


அன்று ,
நச் என்று இதழ் பதித்தாய் - நின்
இதழோர புன்னைகையுடன் காதலோடு !
இன்றும் ,
நச் என்று இதழ் பதிக்கிறாய் - அதில்
காதல் இல்லை ...
காமம் இல்லை ...
புரிதலும் இல்லை ..!

வேண்டும் ,
மீண்டும் ஒரு முறை - உனது
இதழச்சு .!!

ஆம் ,
தனித்திருக்கிறேன்
தவித்திருக்கிறேன்
ஏக்கங்களுடன்

மீண்டும்,
நினது - அதே
பழைய காதலின் சுவடிற்காக ..........