ஆரம்ப கால அதிசயமே
உன்னை மறக்க முடியவில்லை
நான் உன்னைப் பார்த்த பொழுது
சில சமயம் கண்களை மூடியது
பாதிக்கண்கள் திறந்து பார்த்தது
பார்த்து பரவசமானது
ஆச்சர்யப்பட்டது
காணமல் கண்களால் தேடியது
சொல்லியது சொல்லாமல் விட்டது
சொல்ல எண்ணித் தேடியது
காலம் காலமாய்
கவிதைகள் தந்தது - நான்
கற்றுக் கொண்டது ஏராளம்
மறக்க முடியவில்லை - இப்பொழுதெல்லாம்
வயது ஏறி தலை வெளுத்து
மகளுக்கு கல்யாணம் - பேரன்
பிறந்து இருக்கான் - நீங்க
வாங்க -
வரிங்களா -
வரையா - வாடா - என
எதை சொல்லலாம்
என மௌனம் காத்தது
இன்னமும்
உன்னை மறக்க முடியவில்லை ..!
Subscribe to:
Post Comments (Atom)

sathyamana unmai vidhusha!
ReplyDeleteNice kavithai!
nandri melliname.....
ReplyDelete