Tuesday, March 2, 2010

முதற்காதல்

ஆரம்ப கால அதிசயமே
உன்னை மறக்க முடியவில்லை
நான் உன்னைப் பார்த்த பொழுது
சில சமயம் கண்களை மூடியது
பாதிக்கண்கள் திறந்து பார்த்தது
பார்த்து பரவசமானது
ஆச்சர்யப்பட்டது
காணமல் கண்களால் தேடியது
சொல்லியது சொல்லாமல் விட்டது
சொல்ல எண்ணித் தேடியது
காலம் காலமாய்
கவிதைகள் தந்தது - நான்
கற்றுக் கொண்டது ஏராளம்
மறக்க முடியவில்லை - இப்பொழுதெல்லாம்
வயது ஏறி தலை வெளுத்து
மகளுக்கு கல்யாணம் - பேரன்
பிறந்து இருக்கான் - நீங்க
வாங்க -
வரிங்களா -
வரையா - வாடா - என
எதை சொல்லலாம்
என மௌனம் காத்தது
இன்னமும்
உன்னை மறக்க முடியவில்லை ..!

2 comments: